சுயமரியாதையின் ஒளிக்கொடி: பெரியாரின் பாரம்பரியம்

தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் தந்தை, சமத்துவம், பகுத்தறிவை ஊட்டியவர் சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் முன்வைத்தவர். சமூகம் ஒதுக்கியவர்களை உயர்த்தியவர், பெண்கள் உரிமை, கல்வி மற்றும் சிந்தனை சுதந்திரத்தை உறுதியாகக் காக்கின்றவர். திராவிட இயக்கத்தின் தலைவராக, தமிழ் அடையாளத்தைப் போற்றியும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியும் வந்தவர்.

தந்தை பெரியார், பெண்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் முன்வைத்து முதன்மையாகக் குரல் கொடுத்தவர். பெண்கள் தங்கள் விடுதலையின் ஒருபகுதியாக செயல்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டியவர். பாரம்பரிய அடக்குமுறைகளை எதிர்த்து, பெண்களை தங்கள் எதிர்காலத்தை உருவாக்க அதிகாரம் பெறச் செய்தார். இவரது முன்னோக்கான சிந்தனைகள் இன்று கூட பெண்கள் விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

பெரியார் உலகம் - தந்தை பெரியாரின் நிலையான மதிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான மய்யமாகும். சமத்துவம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை வலியுறுத்திய அவரின் சிந்தனைகளை இம்மய்யம் வெளிப்படுத்துகிறது. இங்கு 95 அடி உயர மிகப்பெரிய சிற்பம் எழுந்திருக்கிறது, பெரியாரின் உயர்ந்த சிந்தனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, அவற்றின் மாற்றுத் தன்மையை நம்மால் உணரச் செய்கிறது. இந்த தனித்துவமான வெளிக்கட்டமைப்பு, வரலாறு, கலை மற்றும் செயற்பாட்டின் சந்திப்பாக இருந்து, வருங்கால தலைமுறைகளைத் தொடர்ந்து ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரியாரை உலகமயமாக்குவோம்,
உலகை பெரியார்மயமாக்குவோம்
img
img
1,20,000
சதுர அடி
95 அடி
சிலை
25 மாதங்கள்
கால அளவு

பெரியார் உலகம் வெறும் நினைவுச்சின்னம் அல்ல. இது பழைய பாரம்பரியங்களுக்கு சவாலிட்டு, சமத்துவமான சமுதாயத்திற்காக போராட மக்ககளுக்கு கல்வியளிக்கவும் ஈர்க்கவும் ஊக்கமளிக்கவும் உருவாக்கப்பட்ட இயக்கமிக்க ஒரு பகுதி. கட்டிடக்கலை, வரலாறு, மற்றும் செயற்பாடு சந்திக்கும் இப் பெரியார் உலகத்தில், எல்லைகளை தாண்டி உலகத்தையே மேம்படுத்தும் பாரம்பரியத்தை உருவாக்க வாருங்கள்!

தனிப்பெரும் செயற்பாடு: தந்தை பெரியாரின் உலகத்திற்குள் ஒரு முன்னோட்டம்

கலை மற்றும் செயற்பாட்டை ஊடுருவிய ஒரு மாற்றத்தினை உருவாக்கும் அனுபவத்திற்காக, கவனமாக வடிவமைக்கப்பட்ட வசதிகளை ஆராயுங்கள்.

பெரியார் உலகம் - திருச்சியிலிருந்து 25 கிமீ தொலைவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், சிறுகானூரில் விரிவாகப் பரந்து பரக்கும் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இந்நிலத்தின் மையத்தில், 95 அடி உயரமுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பெரியார் சிலை கம்பீரமாக காட்சி தருகிறது. இது 60 அடி உயர அடித்தளத்தின் மேல் எழுப்பப்பட்டதால், மண்ணிலிருந்து மொத்தம் 155 அடி உயரத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் பிரம்மாண்டச் சிற்பம், தந்தை பெரியாரின் பகுத்தறிவுவாதக் கொள்கைகளின் ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது வெறும் நினைவுச்சின்னம் மட்டுமல்ல, சமத்துவம், மனிதநேயம், மற்றும் முன்னேற்றக் கொள்கைகளின் நிலையான பாரம்பரியத்திற்கான வலுவான சாட்சியாகவும் திகழ்கிறது.

பெரியார் உலகம், பார்வையாளர்களை ஊக்குவித்து, இன்னும் நீதிமிக்க மற்றும் சமத்துவமான சமுதாயத்தைக் கட்டமைக்கின்ற அடிப்படைக் கொள்கைகளை அனுபவிக்கவும், அவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அழைக்கின்ற ஒரு பெரும் தூண்டுகோளாக அமைந்துள்ளது.

img

நன்கொடை

மாற்றத்தின் பாரம்பரியத்தில் பங்களிக்கவும் - தந்தை பெரியாரின் பாரம்பரியத்தை பரப்ப எங்களுக்கு ஆதரவு அளிக்கவும்!

உங்கள் ஆதரவு மாற்றத்திற்கான முக்கிய சக்தியாக இருப்பதை அறிதலில் மகத்தான திருப்தி உள்ளது. தங்களை விட பெரிதாக ஒரு இயக்கத்தின் அங்கமாக இருப்பதன் மகிழ்ச்சியை உணருங்கள் - இது வரலாற்றை மறுபரிசீலிக்கும், சுயமரியாதையை மேம்படுத்தும், மற்றும் பல்வகைப் பண்புகளை கொண்டாடும் ஒரு இயக்கம்!

மேலும் படிக்க

கண்ணோட்டம் மற்றும் தாக்கத்தில் ஒத்துழைப்பாளர்கள்

எங்கள் மதிப்புமிக்க ஆலோசகர்கள், பெரியார் உலகத்தை உண்மையாக மாற்றும் முக்கிய சக்தியாக செயல்படுகின்றனர். இந்த பார்வையுடனான திட்டத்தை வாழ்வில் கொண்டு வர எங்களுடன் கூட்டாகயிருந்து செயல்படுகின்றனர். சமத்துவம், அறிவு, மற்றும் முன்னேற்றத்தின் உலகளாவிய சின்னமாக இதை உருவாக்க, நாம் அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றோம்.

மேலும் படிக்க

கட்டுமான வளர்ச்சி தகவல்கள்